ஒவ்வொருவருடைய பயணங்களும் வித்தியாசமானவை

மனசோர்வு

மனசோர்வு என்றால் என்ன?

எல்லோரும் கவலையாய், ஒருவகை மந்தநிலையை, மனநிலை மாறுபாடுகளை, சிலவேளைகளில் உணர்வதும், அனுபவிப்பதும் உண்டு. ஆனால் மனச்சோர்வு ஒருவகை துயரார்ந்த கடுமையான உளநல பிரச்சனை.

மனசோர்வு உடையோர்க்கு கவலைப்படுதல், மந்தமாய் உணர்தல், எதுவும் இல்லாத போன்ற உணர்வு வாரக்கணக்காய் , மாதக்கணக்காய் , வருசக்கணக்காய் கூட  நீடிக்கும்.

கீழ்வரும் காரணங்களில் ஒன்றோ அல்லது இரண்டோ ஒருவருக்கு இருக்குமானால் அவர் "மனசோர்வு" என்னும் மனவருத்தத்தால் பாதிக்கப்பட்டவராவார்.

1. சோக உணர்வு, துயரார்ந்த நிலை, கவலையையும், வெறுமையாயும், மனம் சோர்ந்தவாராய் நாள் முழுவதும் காணப்பட்டாராயின் , அவர் மனசோர்வு என்னும் உளநோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார்.

2. எதிலும் மகிழ்ச்சியோ, ஆர்வமோ அற்றிருத்தல். தான் மகிழ்ச்சியுடனும், சந்தோஷத்துடனும் செய்யும் காரியங்களில் கூட நாட்டம் இல்லாமல் இருத்தல். 

மனசோர்வு வியாதியை கண்டுபிடிப்பதற்கு உளநல வைத்தியர் சில பிரத்தியேக காரணங்கள் உண்டா என்று பார்ப்பார்கள். பிரத்தியேகமாக அவற்றின் நாளாந்த வாழ்வை பாதிக்கும் சில தனித்தன்மையான காரணங்கள் ஒருவரை பாதிக்கின்றதா என்று பார்ப்பார்கள். 

தனித்துவமான காரணங்கள் சில:

  • பசியின்மை அல்லது உணவின் மீதான தடைபடும் நாட்டம்

  • நித்திரை கொள்வதில் மாற்றம் அல்லது நித்திரை குறைவு, நித்திரை பிரச்னை.

  • செயலின்மை அல்லது செய்யும் காரியங்களில் கவனக்குறைவு

  • குற்ற உணர்வும், எதிர்மறை சிந்தனைகளும், குறைவான சுயமதிப்பும்

  • விலிமைக்குறைவு

போன்றவற்றைக் கூறலாம்.

 இவ்வற்றிக்கு மேலாக கீழேகுறிப்பிடும் காரணிகளில் ஐந்துக்கு மேட்பட்ட காரணிகளில் நாளாந்தமாகவோ அல்லது கிட்டத்தட்ட நாளாந்தமாய் உணரப்பட்டால்  ஒருவர் மனசோர்வு வியாதியால் அவதிப்படுவதை உறுதிப்படுத்தலாம்:

  • தீர்மானமற்று குறிப்பிடத்தக்க எடை இழப்படைதலோ அல்லது எடைகூடுதலோ அல்லது பசி எடுப்பதில் மாற்றம் ஏட்படுதல்.

  • தூக்கமின்மை அல்லது அதிக அளவில் தூங்குவது (தூக்கமின்மை/தூக்கமிகைவு)

  • உள இயக்க கிளர்ச்சி அல்லது உள்ள இயக்க தாமதம்/ சுணக்கம்.

  • அயர்ச்சி, களைப்பு, சோர்வு, உடலில் வலிமை இல்லாமை.

  • எந்த வெகுமதியும் அற்று போனதுபோலும், தேவையற்ற குற்ற உணர்வு.

  • போதாத அல்லது பலவீனமான கவன குறைவு அல்லது குறையுடைய அல்லது தவறுகள் கொள்ளப்பட்ட, பலவீனமான முடிவுகளை எடுத்தல்.

  • திரும்பத்திரும்ப இறப்பை பற்றிய எண்ணம்.

  • தற்கொலை செய்யவேண்டும் என்ற யோசனை; தற்கொலைக்குத் திட்டமிடல், தற்கொலை செய்ய முயற்சித்தல்.

  • மருத்துவரீதியாக குறிப்பிடத்தக்க துயரம் அல்லது தினசரி செய்யும் செயற்பாடுகளில் குறைபாடு.

இந்த அறிகுறிகள் நோயுற்றவரின் சுய அறிக்கைமூலமாயும், பிறர்தரும் அறிக்கை மூலமாயும், உளநல வைத்தியர் ஒருவரின் அவதானிப்பின் ஊடாகவும் மதிப்பிடமுடியும்.

 

குறிப்பாக, பல்வேறு காரணிகளின் இடைச்செருகல் ஒருவருக்கு "மனசோர்வு" வருவதற்கு காரணிகள் ஆகலாம்.

 

மனப்பாங்கை உயர்த்துவதற்கான குறிப்புகள்

சுயசம்பாசனையை/ சுயப்பேச்சை சரிபார்த்தல்:

நாம் துயருற்று இருக்கும் வேளைகளில் எதிர்மறையான கருத்துக்களை நமக்கு நாமே கூறிக்கொள்ளலாம். உதாரணதிற்கு:

  • நான் ஒரு நம்பிக்கையற்றவன்/தோல்வியுற்றவன்

  • என்னால் முடியாது என்றபோது நான் ஏன் கவலைப்பட வேண்டும்.

  • என்னால் ஒருபோதும் இவைகளை செய்து முடிக்க முடியாது.

  • நல்லது எதுவும் எனக்கு நடக்கப்போவதில்லை

  • நான் ஒரு வெகுமதியற்ற ஆள்

நாம் மன சோர்வுடன் இருக்கும் வேளைகளில் எதிர்மறை சுயப்பேச்சு மேலும் மேலும் சோர்வடையும் வலுவைக் கூட்டும் . மேலும், நமக்கு பயன்தரும் உத்திகளை நாம் பயன் படுத்துவதை நிறுத்திவிடும்.

மறுபுறத்தில் ஆக்கபூர்வமான சுயப்பேச்சு நமது வாழ்வின் கஷ்டங்களை சமாளிக்க உதவும்.

உங்களுடன் நீங்கள் என்ன பேசுகிறீர்கள் என்பதை கவனித்து உங்கட்கு பயன்தரும், உற்சாகமூட்டும், மேன்மை படுத்தும் சுயபேச்சை பேசுங்கள். உதாரணத்திற்கு:

  • இப்போ நடப்பது ஒரு கடினமானகாலம் ஆனால் அது கடந்து போய்விடும்.

  • என்னை சரியாக பார்த்துக்கொள்வதுற்கு நான் இந்த நேரத்தை பயன்படுத்துவேன்.

  • நான் எப்படி உணர்ந்த போதும் நான் எப்போதுமே ஒரு தகுதிவாய்ந்த நபர்.

உங்கள் கண்ணோட்டத்தில் விசயங்களை வைத்திருங்கள்

நாம் சோகமாக இருக்கும் வேளைகளில் விசயங்களை அவைகளின் உண்மைத்தன்மையிலும் பார்க்க மோசமானவைகளாய் பார்ப்பது சுலபம். அத்துடன் இவைகளை விட மோசமான விசயங்கள் இனிமேல் வரப்போகின்றது என்று எதிர்பார்ப்போம். இவ்வேளைகளில் ஒரு அடிபின்தள்ளிப் போய் உங்களை துன்புறுத்தும் விசயங்களை ஒருமுறை ஆராயுங்கள். 

உங்களிடம் நீங்கள் பின்வரும் கேள்விகளை கேளுங்கள்:   

1. விளைவுகளை உண்மையில் அறியாமல் ஏதாவது கூடாதனவைகள் நடக்கும் என்ற அனுமானத்துடன் என்னால் முன்னேற்றம் அடைய முடியுமா?

2. விழைவுகள் நிச்சயமாய் நடக்க கூடியவைகளா, சாத்தியமானவைகளா அல்லது அனேகமாய் நடக்க மாட்டாதவைகளா? 

3. ஒருவேளை மோசமான விழைவுகள் ஏற்பட்டால் அதை பற்றி என்னால் என்ன செய்ய முடியும்?

சிலவேளைகளில் நீங்கள் எப்படி சமாளிப்பீர்கள் என்றும் அல்லது பிரச்சனைகளை எப்படி நிர்வாகிப்பது என்பதை முன்கூட்டியே யோசிப்பது, மோசமானவைகள் நடந்தாலும் கூட, விசயங்களை முன்னோக்கவைக்கின்றது.

செயல்பட முனைதல்

நீங்கள் மகிழ்வாய் அனுபவிக்கும் விசயங்களை ஓர் குறிப்பில் எழுதிக்கொள்ளுங்கள். இவைகளில்  சில:

  • சுலபமான உடற்பயிற்சி

  • வாசிப்பது

  • தியானம் செய்தல்

  • சங்கீதம் கேட்டல்

  • நண்பர்களுடன் பொழுதை கழிப்பது, போன்றவை.

அதன் பின்பு உங்கட்கு ஒருவகை சாதித்து விட்ட உணர்வை கொடுக்கக் கூடிய விசயங்களை குறிப்பெடுங்கள். அதாவது செய்து முடிக்கும் போது  உங்கட்கு  விடையங்கள், அல்லது செய்தால் நன்றாய் இருக்கும் என்று நீங்கள் நம்பும் விடயங்கள். இவைகளில்  சில:

  • வீட்டு வேலைகள்

  • ஏதாவது நோக்கத்துடனோ அல்லது எதையாவது செய்து முடிக்கவோ செய்யும் பிரயாணங்கள்

  • புத்தகம் படித்தால் அல்லது உங்கட்கு பிடித்த விஷயம் ஒன்றை பற்றி ஆய்வு செய்தல்

இதன் பின் உங்கள் வாராந்திர அட்டவணையை எடுத்துக்கொள்ளுங்கள். உங்கள் குறிப்புகளில் இருக்கும் பணிகளை ஒவ்வொன்றாய் நிறைவேற்ற நேரம் ஒதுக்குங்கள். முக்கியமாக நீங்கள் நேரம் ஒதுக்கும் போது அவ்வேலைகளையோ அல்லது கலந்துகொள்ள நினைக்கும் நிகழ்வுகளுக்கு ஒதுக்கப்படும் நேரமும், காலமும் யதார்தமானவையாகவும் அடையக்  கூடிய இலக்குகளாயும் இருப்பது அவசியம். ஆகவே அவ்வாறான இலக்குகளை நிர்ணயித்து அவற்றை அடையும் இலக்கை நோக்கி வேலை செய்ய வேண்டும்.

தளர்வு மற்றும் நினைவாற்றல் பயிற்சி

  • உங்கள் உடலையும் நரம்பு மண்டலத்தையும் அமைதியாக நிலைநிறுத்தவும் சீரமைக்கவும் தொடர்ந்து தளர்வு, தியானம் அல்லது மனப்பயிற்ச்சி செய்யவும்.

  • பிரத்தியேகமாக நினைவாற்றல் பயிற்சி, கடினமான உணர்வுகள் உங்களை மூழ்கடிக்காமல் அப்படிப்பட்ட உணர்வுகளுக்கு பதில் அளிக்க உதவும்.

உங்கள் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ளுங்கள்

உணவுமுறை, உடட்பயிற்சி மற்றும் பிற ஆரோக்கியமான நடத்தைகள் மனசோர்வில், மனஅழுத்தத்திலிருந்து மீள உதவும். ஆகவே முக்கியமாக:

  • நீங்கள் நன்றாக சாப்பிடுவதை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்.

  • உடற்பயிற்சியை வழக்கமானதாக ஆகுங்கள்

  • உங்கள் மனம் கடினமாக இருக்கும் வேளைகளில் மது அருந்துதல், புகை பிடிப்பதை அல்லது போதை மருந்து பாவிப்பது போன்றவற்றை தவிர்த்து கொள்ளுங்கள்.

உதவியை நாடுதல் 

பொது மருத்துவர்

ஒரு பொது மருத்துவரிடம் மருத்துவ பரிசோதனை செய்து உங்களில் காணப்படும் அறிகுறிகட்கு உடல்நோய் எதாவது காரணமாய்  உள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுதல் மிகவும் முக்கியம்.

உளவியலாளர் ஒருவரை அணுகுவது

உங்கட்கு மனசோர்வு இருந்தாலோ அல்லது அப்படி இருப்பது போல் நீங்கள் உணர்ந்தாலோ ஒரு உளவியலாளரின் உதவியை பெறுவது உங்கட்கு உதவக்கூடும்.  

உளவியலாளர்கள் மிகவும் பயிற்சி  பெற்ற  மாற்றும் தகுதி வாய்ந்த தொழில் வல்லுநர்கள். பல்வகையான மனநல கவலைகளை கண்டறிந்து சிகிச்சையளிப்பதில்  திறமையானவர்கள். இவற்றில் மன சோர்வு, மன அழுத்தம் போன்றவைக்கும் சிகிச்சை அளிப்பதில் சிறந்தவர்கள்.

ஒரு உளவியலாளரால் உங்கள் மனநிலையை பாதிக்கும் காரணிகளையும் பிற அறிகுறிகளுக்கு பங்களிக்கும் அல்லது தூண்டும் காரணிகளையும் அடையாளம் கண்டு நிவர்த்தி செய்ய உதவமுடியும்.

லேசான அல்லது மிதமான மன அழுத்தத்திலிருந்து மீளுவது எதிர்பார்க்கப்படுகின்றது. இருப்பினும், ஒரு மன சோர்வு நிகழ்வில் இருந்து முழுமையாக குணமடையாமையும் அதன் அறிகுறிகள் மீண்டும் தோன்றுவது பொதுவானது. பெரிய மன சோர்வை அனுபவித்தவர்களில் குறைந்தது 50 சதவீதமானோர் மீண்டும் அப்படி ஓர் வருத்தத்தை அனுபவிப்பார். அப்படி இரண்டு தரம் அனுபவித்தவர்கட்கு மூன்றாம் முறையும் வரும் ஆபத்து 70 சதவீதம் ஆக உயர்கிறது. மூன்று தரம் அனுபவித்தவர்கட்கு நாலாம் முறையும் வரக்கூடிய ஆபத்து 90 சதவீதமாக உயர்கிறது.


பதற்றம்

மன அழுத்த சூழலில் பதற்றம் ஒரு குறுகிய நேர எதிர்வினை காரணியாக இருந்தபோதும் சிலருக்கு கவலையான எண்ணங்கள், உணர்வுகள் அல்லது உடல் அறிகுறிகள் முற்றுப்பெறாதவைகளாய், கடுமையானவைகளாய் நாளாந்த வாழ்வை தடை செய்யலாம். 

கடுமையானதாய், திரும்பத்திரும்ப ஏற்படுவதுமாய், தொடரும் பதற்றத்தின் அறிகுறிகள் ஏற்படுமாயின் அதை பதற்றக் கோளாறு என்று இனம் காணலாம், அல்லது கருதப்படலாம்.

பதற்றக் கோளாறுகள் ஆஸ்திரேலியாவில் கண்டறியப்படும் மன நலக் கோளாறுகளில் ஒரு பொதுவான கோளாறு என்று கண்டறியப்பட்டுள்ளது. ஒவ்வொரு வருடமும் சுமார் 14% ஆஸ்த்திரேலியர்கள் இக்கோளாற்றினால் பாதிக்கப் படுகின்றார்கள். 

 

பல வகையான பதற்றக் கோளாறுகள் உள்ளன:

பொதுவகை பதற்றக்கோளாறு (General Anxiety Disorder):

 குடும்பம், வேலை, உடல் நலம் போன்ற அன்றாட நிகழ்வுகளை சூழ்நிலைகளை பற்றிய தொடர்ச்சியான, அதிகப்படியான கவலையால் வகைப்படுத்தப்படுகின்றது. இது கட்டுப்படுத்துவதற்க்கு கஸ்டமானதாயும், அன்றாட வாழ்விலும் உறவுகளிலும் தலையிடுவதாயும் அமையும். 

குறிப்பிட்ட பயம்/பதற்றம் :

குறிப்பிட்ட பயம் அல்லது பதற்றம் ஏதாவது ஒரு தனிப்படட பொருளை பற்றியோ, சூழ்நிலையிலேயோ ஏற்படும் அதிதீவிர பதற்றமாகும். பொதுவாக வானுர்தியில் பறப்பதற்க்கோ, உயரத்தில் ஏறுவதற்க்கோ, ஊசி போட்டுக்கொள்வதற்க்கோ அல்லது சிலந்தி, விலங்குகள் போன்றவற்றை நெருங்குவதற்க்கோ ஏற்படும் பயத்தையும், பதற்றத்தையும் உள் அடக்கலாம். 

பீதிக்கோளாறு (Panic Disorder)

எதிர்பாராமலும், திரும்ப திரும்ப ஏற்படும் பீதித்தாக்குதல்களால் ஏற்படுவதே பீதிக்கோளாறு என்று வகைப்படுத்தப்படுகின்றது. நெஞ்சுவலி, அளவுக்கு அதிகமான இதயத்துடிப்பு, தலைசுற்றல், மூச்சுவிட முடியாமை போன்ற உடல் உவாதைகளுடன் சேர்ந்து எழுச்சியுறும் பயத்தையும், பதற்றத்தையும் பீதித்தாக்குதல் என்று வகைப்படுத்தலாம். எங்கிருந்து தோன்றுகின்றது என்றோ இவைகளுக்கான காரணிகள் என்ன என்றோ தெரியாமலே இத்தாக்குதல்கள் ஏற்படுகின்றன. 

பொது இடங்களில் செயலாற்ற அஞ்சுதல் (Agrophobia):

ஒரு சந்தர்பத்திலையோ அல்லது பொது இடங்களிலோ அல்லது மற்றவர்கள் நிறைந்த சபைகளிலோ செயற்படவோ அல்லது பேசவேண்டியோ நேரிடின் அவ்வேளைகளில் ஏற்படும் அதி தீவிரமான பதற்றத்தை உள்ளடக்கும். இவ்வேளைகளில் பதற்றம் அடைவோர் அந்த சூழ்நிலைகளில் இருந்து தங்களால் வெளிவரவோ அல்லது தங்கட்கு தேவையான உதவிகளை பெறுவதோ கடினம் என்று உணருவார்கள். பொதுவாக இப்பதற்றம் உடையோர் பொது போக்கு வரத்து ஊர்திகளில் பயணிக்கும் போதோ, வரிசைகளில் நிற்கும் போதோ, சனக்கூட்டங்களில் நிற்க்கும் போதோ, அல்லது தனிமையில் வீட்டுக்கு வெளியே நிற்கும் போதோ பதற்றம் அடைவார்கள்.  

பிடிவாத ஆக்கிரமிப்பு நிர்பந்த கோளாறு (Obsessive Complulsive Disorder):

திரும்ப திரும்ப தாங்கி நிற்க்கும் துன்பகரமான நினைவுகளாய், மனத்தில் தோன்றும் படங்களாய், சித்திரங்களாய் நிர்பந்திக்கப் பட்ட துன்ப உணர்வுகள் ஒரு வகை பிடிவாதமும் நிர்பந்தமும் பிடிக்கப் பட்டவர்களாய் இக்கோளாறு  உடையவர்கள் இருப்பார்கள். 

இவர்கள் சில விசயங்களை செய்ய நிர்பந்திக்கப் ப ட்டவர்கள் போலும், சில நடத்தைகளை திரும்ப திரும்ப செய்யும் நடத்தை உடையவர்களாயும், சில கிரிகைகளை அல்லது சில சிந்தனைகளின் ஆக்கிரமிப்பு உடையவர்களாயும் இருப்பார்கள். 

இக்கோளாறு உடைய சிலர் பிடிவாதமுடைவார்களாயும் ஒருவகையான ஆக்கிரமிப்புக்குள் இருப்பவர்களையும் இருப்பார்கள். இவ்வகையான பிடிவாதமான சிந்தனையும் நடத்தைகளும் அவர்களின் வாழ்வை முழுமையாக ஆக்கிரமித்து அச்சிந்தனை வளியில் நடப்பவர்களாயும் இருப்பார்கள். 

இக்கோளாறு உடையவர்கள் பொதுவா அவர்களுடைய விட்டுக்கொடா பிடிவாதங்கட்கும், நிர்பந்திப்பவர்களாயும், சிறிய விசயங்கட்கு கூட பெரிதாக எதிர் தாக்குதல்கள் செய்பவர்களாயும்  இப்படியான தங்கள் நடத்தைகளை தங்களால் நிற்பாட்ட முடியாதென்றும் உணர்வார்கள். 

சமூக பதற்றக் கோளாறு (Social Anxiety Disorder):

சமூகம் தம்மை பிழையாக விமர்சிக்கும் என்றும் தன்னை எதிர்மறையுடன் பார்க்கும் என்பது போன்ற சிந்தனைகளால் ஏற்படும் அத்தீவிரமான பதற்றத்தினால் வகைப் படுத்த படுகின்றது. 

சமூகசூழல்களில், நிகழ்வுகளில்தனதுநடத்தைகளினால்தான்அவமானப்படுத்தப்படுவேனோஅல்லதுசங்கடத்துக்குஉள்ளாகிவிடுவேனோஎன்றபயத்தினால்அச்சூழல்களையும், நிகழ்வுகளையும்ஒருநபர்தவிர்த்துகொள்ளவைக்கின்றது.

காரணிகள்:

இக்கோளாறுக்கு பிரத்தியேகமாக, தெரிந்த தனிப்படட காரணிகள் இல்லாதபோதும் பலவகையான ஆபத்து நிறைந்த காரணிகளும் தூண்டுதல்களும் பங்களிக்கக்கூடும். இவைகள் ஒன்றுக்கொன்று வேறு பாடான பதற்ற நிலைகளாய் இருந்தபோதும் பொதுவாக பின்தரப்படும் காரணிகளை வகைப்படுத்தலாம்.

  1. மரப்பணு:

    சிலகுடும்பங்களில் உள்ளவர்கட்கு  பரம்பரை பரம்பரையாக இக்கோளாற்றுக் கூறுகள் தொடர்வதாக அறியப் படுகின்றது. சிலவகையான பதற்ற நிலைகள் சிலகுடும்பங்களில் தொடர்வதாக அறியப் படுகின்றது. 

  2. உயிரியல்:

    சில பதற்ற நிலைகள் ஒருவரின் முளை எவ்வாறு மன அழுத்தங்களை கையாண்டு அவற்றை பிரதிபலிக்கின்றது என்பதும் அதன் விளைவால் ஏற்படும் உடல் எழுச்சியை சீர்படுத்துகின்றது என்பதையும், அவ்வேளைகளில் உடலில் இருந்து இரத்தத்தில் கலக்கப்படும் உடலுறுப்புக்களை உசுப்பி விடுகின்ற உட்சுரப்புக்களை (Hormones such as Adrenalin) எப்படி கையாள்கின்றது என்பவற்றையும் அடிப்படையாக கொண்டிருக்கின்றது.   

  3. சிந்திக்கும் விதம்:

    இக்கோளாறு உடையவர்களின் சிந்திக்கும் விதம் தங்கட்கு மிகவும் மோசமானவைகள் நடக்கப் போகின்றது போலவும், தொடர்ச்சியான எதிர்மறை சுயபேச்சு உடையவர்களாயும், நிச்சயமற்றவைகளை ஏற்றுக் கொள்ள கஸ்டமாயும், தங்களைப்பற்றிய குறைவான மதிப்பீட்டுடனும், அடிக்கடி பதற்றம் அடைவதையும் சுற்றியே இருக்கும். இவர்களின் சிந்திக்கும் விதம் அநேகமாய் கவலைகளுடன் இணைக்கப்பட்டிருக்கும்.

இவர்கள் நாளாந்த உடல் மாறுதல்களைப்பற்றி அதிகம் உணர்ச்சி வசப்படுபவர்களாயும் அவைகளை பிழையாக புரிந்துகொண்டு அவ்வகை மாற்றங்கள் தங்கட்கு ஏதோ பெரும் கெடுதல் நடக்கப் போகின்றது என்பன போன்ற தவறான புரிதல் உடையவர்களாய் இருப்பதுவும் இவர்கட்கு மேலும் சில கவலைக்கோளாறுகள் உருவாகுவதை அதிகரிக்கும். 

சமாளிக்கும் உத்திகள்

திறம்பட சமாளித்து அடக்கும் உத்திகளை பாவிக்காமல் இக்கோளாறு அல்லது பதற்றம் ஏற்படும் சூழல்களையும் சந்தர்ப்பங்களையும் தவிர்ப்பது இக்கோளாறுகள் மேலும் கூடுதல் அடைவதற்கு வளிவகுப்பதுடன் மேலதிகமான கவலைக் கோளாறுகள் உருவாகும் அபாயத்தையும் அதிகரிக்கும். 

அழுத்தங்களை கொடுக்கும் நிகழ்வுகள்

திருமண முறிவு, வேலைப் பழு, பாடசாலைகளில் கொடுக்கப்படும் கால நிர்ணயங்கள், பணக்கஸ்டங்கள் போன்ற நிகழ்வுகள் வாழ்வில் ஏற்படும் போது இக்காரணிகள் பதற்றக் கோளாறுகளை ஏற்படுத்தும் உந்துண்ணிகளாய் அமையக்கூடும்.

இளவயதில் அனுபவித்த வாழ்வின் அழுத்தல்களும் அதிர்ச்சிகளும் கூட இப்படியான பதற்ற கோளாறுகள் பிற்காலத்தில் ஏற்படக் கூடிய வாய்ப்பை அதிகரிக்கலாம். 

சிகிச்சை முறைகள்

முதலில் உடல் நலக்குறைவுக்கான காரணிகள் உங்கட்கு ஏற்பட்டிருக்கும் கோளாற்றுக்கு காரணமாய் இருக்குமோ என்பதை தெளிவுபடுத்த ஒரு பொது நல மருத்துவரிடம் மருத்துவ பரிசோதனைகளை செய்தல் முக்கியமாகும். பொது நல மருத்துவரோ அல்லது பிரத்தியேக நிபுணத்துவ மருத்துவரோ மருந்துகள் தரக்கூடிய பயன்களையும், ஆலோசனைகளையும் மற்றும் உதவிகளையும் வழங்கலாம். 

பொது மருத்துவரோ அல்லது நிபுணத்துவ மருத்துவரோ கொடுக்கும் மருந்துகளால் குணமடையாமல் போகுமானால் அவர்கள் ஒரு உளவியலாளரை பார்க்க சிபார்சு செய்வார்கள். 

பதற்றக் கோளாறை நிர்வகிப்பதற்கான உதவிக் குறிப்புகள்:

  1. உங்கள் சுயப்பேச்சை சரிப்பார்க்கவும், பொதுவாக வருத்தத்துடனும் கவலையுடனும் இருக்கும் வேளைகளில் நாம் நமக்கே எதிர்மறையான விசயங்களை சொல்லக்கூடும். 

  2.  உதவிபுரியாத சுயப்பேச்சுக்களுக்கு உதாரணங்களாக:

  • நான் எதற்க்கும் உதவாதவன் 

  •   நான் தன்நம்பிக்கையற்றவன்

  • இந்த விசயத்தை நான் சரியாக செய்யப் போவதில்லை 

  • என்னால் ஒருபோதும் எதையும் செய்து முடிக்க முடியாது போன்றவற்றை கூறலாம். 

எதிர்மறையான சுயபேச்சுக்களும், சிந்தனைகளும் நம்மை நாமே தாழ்த்தவும் குறைத்து மதிப்பிடவுமே  உதவும். இவை எங்களுள் பதற்றத்தை கூட்டவும், நாம் அடைய நினைப்பவைகளையும், அவைகளை அடையும் வழிகளிலும் குறுக்கிட்டு நம் இலக்குகளை அடைய முடியாமல் தடுக்கும். 

நமக்கு நாம் என்ன சொல்லிக்கொள்கிறோம் என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும். நம்மை அமைதிப்படுத்தக்கூடியதும், உற்சாகப் படுத்தக்கூடியது மான சுய சிந்தனைகளும், பேச்சுகளும் நம்மை மேம் படுத்த உதவும். உதாரணத்திற்கு:

  • "என்னை செய்ய சொன்னவைகளையும், நான் செய்ய வேண்டியவைகளையும் நான் நன்றாகவே செய்கின்றேன்".

  • "இந்த இக்கடடான காலங்கள் என்னை கடந்து போய்விடும்".

  • " இதே போன்ற விசயங்களை நான் முன்புகடந்து போய் இருக்கிறேன்". போன்றவற்றை கூறலாம்.      

விசயங்களை எங்கள் கருத்தில் வைத்திருத்தல்

நாம் வருத்தத்துடனோ அல்லது கவலையுடனோ இருக்கும் வேளைகளில் விசயங்களை அவற்றின் உண்மை  நிலையிலும் பார்க்க மோசமான நிலையில் இருப்பது போன்று பார்ப்பது சுலபம். அத்துடன் மோசமான விழைவுகள் நடக்கப்போகின்றன என்பது போன்ற எதிர்பார்ப்பும், உணர்வும் ஏற்படுவது எளிது. 

சிறிது பின் நோக்கி ஏதாவது ஒரு கவலையை எடுத்து உங்கள் வாழ்வின் முழுமையான பரினாமத்தில் வைத்துப் பார்த்து உங்களை நீங்களே பின் வருபனவற்றை கேட்டுப் பார்ப்பீர்களானால்:

  1. விளைவுகளும் முடிவுகளும் தெரியாதபோது நிச்சயம் கூடாதனைகள்தான்   நடக்கும் என்று நினைப்பதினால் என்னை நான் முனேற்றப் பாதையில் கொண்டு செல்ல முடியுமா?

  2. விளைவு நிச்சியமானதா, அல்லது சாத்தியமானதா, சாத்திய மற்றதா?

  3. விளைவுகள் மோசமானவைகளாய் இருக்கும் பட்ச்சத்தில் அதை சரி செய்ய என்னால் என்னென்ன செய்ய முடியும். 

சிலவேளைகளில் விளைவுகள் மோசமானவைகளாய் இருக்கும் பட்சத்தில் கூட அவைகளை எப்படி சமாளித்து நிர்வாகிப்பது என்பதை ஆலோசித்து வைப்பதன் மூலம் அந்த விளைவுகளை அவைகளின் நிலைப்பாட்டில் நிறுத்தி முன்னேறமுடியும். 

நீங்கள் செய்ய நினைப்பவைகளை பதற்ற கோளாறு தடுப்பதை அனுமதியாதீர்கள்

உங்கட்கு பதற்றத்தை ஏற்படுத்தக்கூடிய சூழ்நிலைகளை தவிக்க முயலாதீர்கள். அதே வேளையில் அப்படியான சூழ்நிலைகளை எதிர்கொள்ளுங்கள்.

அப்படி அவைகளை எதிர் கொள்வது உங்கட்கு சிரமமாகவோ அல்லது கடினமாகவோ இருக்குமேயானால் ஒரு உளவியலாளரிடமோ அல்லது வேறு மனநல மருத்துபவர்களின் உதவியை நாடி அப்படியான சூழல்களை எதிர்கொள்ளவும் அப்படிப்பட்ட பயங்களில் இருந்து படிப் படியாக மீழ்வதற்க்கான ஒரு திட்ட வரிவறையை ஏற்படுத்தி அதன் மூலம் உங்கள் பயங்களில் இருந்து மீண்டு உங்கள் நம்பிக்கைகளை கூட்டுவதற்க்கு முயற்சிக்கவும். 

தியானம், தளர்வு அல்லது நினைவாற்றல் பயிற்சிகள்

தியானம், தளர்வு அல்லது நினைவாற்றல் போன்ற பயிற்ச்சிகளை ஒரு வழமையான அடிப்படையில் செய்வது உங்கள் உடலையும், நரம்பு மண்டலத்தையும், மனதையும் ஒரு நிலைப்படுத்தி அமைதிநிலைக்கு மாற்ற உதவியளிக்கும். 

உங்கள் உடல் நலனை பாதுகாத்துக் கொள்ளுங்கள்

உடற்பயிற்சி, உணவுக்கட்டுப்பாடு மற்றைய உடல் நல நடத்தைகள் உங்கள் பதற்ற நிலைகளையும், நடவடிக்கைகளையும் சமாளிக்க உதவும். 

ஆகவே, உங்கள் பதற்றத்தை நிர்வாகிக்கவும் கட்டுப்படுத்தவும் பின்வருபவனவற்றை உங்கள் நாளாந்த வாழ்வில் கட்டாயமாக்குங்கள்.

  • நீங்கள் நிறைவாகவும் சரியாகவும் உண்பதை உறுதிப்படுத்திடுங்கள்

  • உடற்பயிற்சியை வழமையாக்குங்கள்

  • உங்கள் நாளாந்த வாழ்வு கஸ்டமாக இருந்தால் அந்த கஸ்டங்களை சமாளிப்பதற்க்கு புகைபிடித்தல், மது அருந்துதல், போதைப் பொருட்களை பாவித்தல் போன்றவற்றை தவிர்த்து கொள்ளுங்கள்.


தற்கொலை தடுப்பு

தற்கொலை என்றால் என்ன?

ஒருவர் தன் உயிரை/ வாழ்வை தானே முடித்துக் கொள்ளல். 

தற்கொலை எண்ணம் ஏன் ஏற்படுகின்றது?

பொதுவாக தன்னால் இனி தான் வாழ்ந்து கொண்டிருக்கும் வாழ்வை தொடர முடியாது என்ற சிந்தனை ஒருவர் உள்ளத்தில் பலமாக தோன்றுவதால் தற்கொலைக்கான முயற்ச்சியை ஒருவர் செய்யலாம்.

தற்கொலை எண்ணத்தை தூண்டும் காரணிகள் என்ன?

வாழ்வு ரீதியானதுவும் கலாச்சார ரீதியானது மான பல காரணிகளை கூறலாம். இவ்வேளைகளில் மன அழுத்தம் அல்லது மன ரீதியாக துன்பத்தின் ஊடாக இருப்பதை அறியலாம். 

பிரத்தியேகமாக மாறுபட்ட கலாச்சாரங்களில் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் உதவிகள் பெறுவதற்க்கு சிரமப்படுவார்கள்.     

கீழுள்ள சூழ்நிலைகளை சமாளிப்பது இவர்கட்கு சிரமமாய் இருக்கலாம். 

  1. வீடு மற்றும் குடும்ப வன்முறைகள்.

  2. பெரிய இழப்பு - பெரிய அளவில்  நிதி இழப்பு, சமூகத்தில் அந்தஸ்து/ மரியாதை இழப்பு வேலை இழப்பு போன்றவை. 

  3. கற்பழிப்பு, கருக்கலைப்பு முதலியன 

  4. வாழ்வுமுறை/துணைத்தேர்வு குறித்து குடும்ப அழுத்தங்கள்

  5. குடும்ப/திருமண சிரமங்கள் 

  6. மன நல நிலை 

  7. நீடித்த/ முடிவுறா வலி அல்லது ஊனம் 

  8. முடிவுறா எதிலி நிலை    

  9. தொடர்ந்து குடியிருக்க முடியாமை/விசா பிரச்சினை 

தற்கொலை சிந்தனை / முயற்ச்சிக்கான அறிகுறிகள்

ஒருவர் தற்கொலை செய்யும் சிந்தனையில் இருக்கின்றார் அதற்க்கான முயற்ச்சிகளை எடுக்க கூடும் என்று எப்படி அறிவது?

ஒருவர் பின்வரும் செயற்பாட்டில் சிலவற்றை அல்லது பலதை செய்வராயின் அவர் தற்கொலை செய்ய வேண்டும் என்ற சிந்தனையில் இருக்கலாம். 

  1. தலைவலி அல்லது வயிற்றுவலி அடிக்கடி தோன்றுதல் 

  2. விடைபெறுதல் போன்ற ஆயத்தங்களை செய்தல் 

  3. முக்கியமான உடமைகளை பிறருக்கு அளித்தல் 

  4. மதுபானம்/ போதைப்பொருள் போன்றவற்றை அளவுக்கு அதிகமாக பயன்படுத்தல் 

  5. இறக்க வேண்டும் என்ற பாணியில் பேசுதல் 

  6. தான் ஒரு சுமை என்றும்/ தான் மற்றவர்கட்கு சுமையாகி விட்டதாய் பேசுதல் 

  7. வாழ்வில் நம்பிக்கை இழந்தது போலும் மேலும் வாழ்வதில் எந்த பயனும் இல்லை என்பனவற்றை அடிக்கடி கூறுதல்.

  8. மரணத்தை ஏற்படுத்த கூடிய அபாயகரமான செயல்களை செய்தல் 

தற்கொலை செய்யும் எண்ணம் உள்ள ஒருவர், மற்றவர்களிடம் நேரடியாக உதவி கேட்காமலும் வழமைக்கு மாறாக மற்றவர்களிடமிருந்து  ஒதுங்கியும் இருக்கலாம். 

ஒருவரை தற்கொலை எண்ணத்திலும்/ அம்முயற்ச்சியிலும் இருந்து எப்படி தடுத்து மீட்பது?

எந்த நிலையில் ஒருவர் தற்கொலை செய்ய எண்ணுவார் / முயச்சிப்பார்?

தற்கொலை செய்ய நினைப்பவர்களோ அல்லது முய்யற்ச்சிப்பவர்களோ உண்மையில் வாழ்வை முடித்து கொள்ள விரும்புவதில்லை. ஆனால், அந்த நிலைக்கு தள்ளப்படுகின்றார்கள். இதற்க்கான காரணிகள் பலவாக இருக்கும். உதாரணத்திற்க்கு :

  • உணர்வு வலி

  • உடல் வலி

  • தோல்வி

  • அவமானம்

இப்படி பலவற்றை கூறலாம். இந்த நிலைகளை பொறுத்து சமாளித்து முன்னேற முடியாது என்ற எண்ணம் இப்படிப்பட்டவர்களை தற்கொலை முயற்ச்சிக்கு தூண்டுகின்றது. 

இந்த நிலையில் இவர்களுடன் இந்த முடிவு பற்றி கலந்து உரையாடுவது எளிதல்ல. 

  • முதலில் அவர்கள்மேல் நீங்கள் உண்மையான அக்கறை உள்ளவர் என்பதை அவர்கள் நம்பி ஏற்றுக் கொள்ள வேண்டும்.

  • அடுத்து அவர்கட்கு உதவி புரிய அநேகர் உள்ளதை உணரவைக்க வேண்டும்

  • மேலும் அவர்களால் தற்போதைய பிரச்சனைகளில் இருந்து மீள முடியும் என்றும் அதற்கான பலத்தையும் உதவிகளையும் அவர்கள் பெறமுடியுமென்றும் அவர்கட்கு உணரவைக்க வேண்டியவற்றை அவர்கட்கு கொடுக்க வேண்டும்.

  • அவர்கள் தற்போது இருக்கும் நிலை நிலைத்திருக்காது அது மிகவும் கெதியில் மாறிவிடும் என்பதை நம்ப வைக்க வேண்டும்.

ஒருவருக்கு நீங்கள் எப்படி உதவலாம்: 

  • முதலில் தற்கொலை முயற்சிக்கான அறிகுறிகளை கண்டறிதல். 

  • அப்படி கண்டறியும் பட்ச்சத்தில் அந்த நபர் உங்கள் மேல் நம்பிக்கை வைத்து அவரின் எண்ணங்களையும் உணர்வுகளையும் உங்களுடன் பகிர்வதற்க்கான நம்பிக்கையை ஏற்படுத்துதல்.

  • அவருக்கு அந்த எண்ணம் இருப்பதை புரிந்து கொண்டவுடன் அவருக்கு தேவையான உதவிகளை செய்து அவரை அந்த எண்ணங்களில் இருந்து மீட்டு எடுத்தல்.

  • சில வேளைகளில் அவர்களின் மிகவும் அன்புடையவர்களோ அல்லது அவர்களின் வாழ்வின் ஆதாரம் என்று நினைத்தவர் ஒருவரின் இழப்பு ஒருவரை தற்கொலை சிந்தனையை/முயற்ச்சியை தூண்டலாம். இவ்வேளைகளிள் அவர்கட்கு வாழ்வுக்கான ஆதாரங்களை பெற்றுக் கொடுத்து அவர்களை மீட்டு எடுத்தல்.

தற்கொலை சிந்தனையில் இருக்கும் ஒருவருடன் கலந்து உரையாடும் முன் நீங்கள் அறிந்திருக்க வேண்டியவைகள் என்ன?

  1. அவருடைய கலாச்சார பிண்ணணியும் நம்பிக்கைகளும்.

  2. அவரின் சமயமும் சமயரீதியான நம்பிக்கைகளும். 

  3. அவர்களிடம் என்ன கதைப்பது எப்படி கதைப்பதென்பதை முழுமையாக தயார் படுத்தல். 

  4. அவர்களின் சொற்களையும் உணர்வு வெளிப்பாடுகளையும் பொறுமையுடன் சகித்துக்கொள்ளுதல். 

  5. உதவிகளை எங்கெங்கு பெறலாம் என்பதற்க்கான முழுப்பட்டியலை தயார்படுத்தல்.

  6. அவர்கள் சொல்பவவையாவையும் அன்புடனும் பொறுமையுடனும் செவிமடுத்தல்.

  7. நீங்கள் அவரைப்பற்றி அக்கறை உள்ளவர் என்பதையும் அவரைப்பற்றி கவலை படுகின்றீர்கள் என்பதையும் தெரிவு படுத்தும் முறையை அறியுங்கள். 

  8. அவரின் தன்மையை புரிந்து கொண்டு அவருடன் நேரடியாக பேசும் வழிகளை ஆராயுங்கள். 

  9. நேரடான கேள்விகளை கேட்காமலும் அதேநேரம் அவரின் மனத்தில் ஓடுவதை அறியும் வழிகளை ஆராயுங்கள். 

தற்கொலை செய்யும் சிந்தனையுடன் இருப்பவருடன் கலந்துரையாடும் போது செய்ய வேண்டியவைகள் என்ன?

  1. திறந்தமுனை கேள்விகளை கேட்க ஆரம்பியுங்கள்:

    எப்படி இருக்கின்றீர்கள்?

    நன்றாய் சாப்பிடுகின்றீர்களா?

    நன்றாய் தூங்குகின்றீர்களா?

    உங்களை பற்றி சொல்ல முடியுமா? போன்றவை. 

  2. ஆதரவாயும், ஆர்வமாயும் இருத்தல். உங்களுக்கு உடன்பாடில்லாத விசயங்களாகவோ அல்லது உணர்வதற்க்கும் புரிதலுக்கும் கடினமாக இருந்தாலும் அதை காட்டிக் கொள்ளாமல் ஆதரவு அளிக்க வேண்டும்.

  3. அவரை தொடர்ந்து பேசவைக்கும் வளிமுறைகளை கையாளுங்கள். 

  4. அவரின் சிக்கலை தீர்க்கவோ அல்லது எப்படி தீர்க்கலாம் என்பனபோன்ற ஆலோசனைகளை வழங்க முயலாதீர்கள். 

  5. அந்த நபரை உயிருடனும் பாதுகாப்புடனும் வைத்திருக்க வேண்டும் என்ற குறிக்கோளில் இருந்து மாறுபடாதீர்கள்.

  6. உங்களால் அவருடைய பிரச்சனைகளில் இருந்து அவரை மீழவைக்க முடியும், அதற்க்கான ஆதரவையும் உதவிகளையும் செய்யமுடியும் என்ற சிந்தனையை அவருள் ஏற்படுத்த முயலுங்கள். 

  7. அவர்கள் சொல்வதை நீங்கள் தீவிரமாகத்தான் எடுத்துக் கொள்கின்றீர்கள் என்பதை நம்பவையுங்கள். 

  8.  உங்களால் அவருக்கு தேவையான உதவிகளை பெற்றுத்தரமுடியும் என்பதை உறுதிப்படுத்துங்கள்.

  9. அவருடன் கலந்துரையாடும் வேளைகளில் அன்பையும் கனிவையும்   சிறிதும் தளர விடாதீர்கள். 

  10. அவரின் தற்கொலை எண்ணத்தைப் பற்றி உங்களுடன் பேசுவது சரியானது என்று அவர் உணரும் வகையான கேள்விகளை கேளுங்கள்

  • தற்கொலை பற்றிய எண்ணம் உங்கட்கு இருக்கிறதா? 

  •  அப்படியான எண்ணங்கள் உங்கட்கு எவ்வளவுகாலமாய் இருக்கின்றது?

  • இதற்க்கு முன்பும் இப்படியான சிந்தனைகளை சிந்தித்ததுண்டா?

  • என்பவற்றைகேட்கலாம்.

தற்கொலை செய்ய சிந்திப்பவர்கட்கு/ முயற்ச்சிப்போருக்கு எப்படி என்ன உதவிகள் செய்து தற்கொலை முயற்ச்சியில் இருந்து அவர்களை காப்பாற்றலாம்/ தடுக்கலாம்.

  • அந்த நபர் பாதுகாப்பாக இருக்கவும் உதவியை பெறவும் உதவுதல்.

  • அவரிடம் இருந்து பெற்ற தகவல்கள் மூலம் அவரின் சிந்தனையை மாற்ற தேவையானவற்றை செய்தல்

  • ஆதரவு அல்லது தகவல்களை தேடிப்பெற ஊக்குவித்து உதவுதல்.

  • அவருக்கு நெருக்கமானவர்களுடனும் அவர் நம்பிக்கை கொண்டவர்களிடம் அவர் தனது பிரச்சனைகளைப் பற்றி கலந்துரையாட உதவுதல்/ஏற்பாடு செய்தல்.

  • அவர்களை தொடர்ந்து கண்காணித்து அவரின் நலம் பற்றி விசாரியுங்கள். இது அவர்மேல் நீங்கள் கொண்டிருக்கும் அக்கறையின் வெளிப்பாடாய் இருக்கவேண்டும்.

  • நேருக்கு நேரோ, தோலை பேசி மூலமோ அல்லது குறுஞ்செய்தி/ மின்னஞ்சல் மூலமோ அவருடன் தொடர்பில் இருந்து கொள்ளுங்கள்.

  • அவரைப் பற்றி சிந்திப்பதற்க்கும் அவர் மேல் அக்கறை கொள்ள இன்னும் ஒருத்தர் இருக்கின்றார் என்பதை அவரை உணரவையுங்கள்.

  • அவசர சூழ்நிலை ஏற்படும் போது:

உடனடியாக '000' எண்ணை அழைத்து அவரை நேராக மருத்து மனைக்கு அழைத்து செல்லுங்கள். 

அவருக்கு உதவ தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி இக்கங்கள்:

  • தற்கொலை பதில் அழைப்பு சேவை: 1300 659 467

  • உயிர்காப்பு இணைப்பு: 13 11 14

  • குழந்தைகள் உதவி இணைப்பு: 1800 55 1800 

  • பியோன்ட்-ப்ளு: 1800 512 348       


'Covid 19' நேரங்களில் பிள்ளைகளில் கவனம் செலுத்துதலும் ஆதரவு அளிப்பதும்

Covid-19 தாக்கம் பொதுவாக எல்லோரையும் அவரவர்களின் பொது நலத்தை பாதித்துள்ளது. பிரத்தியேகமாக, நமது பிள்ளைகள் மீதும் அவர்களை நாம் வளர்க்கும் விதத்திலும் பல வகையான அழுத்தங்களை ஏற்படுத்தி உள்ளது.

இவைகள் நம் மீதும் நம் குழந்தைகள் மீதும் பாரிய மன அழுத்தத்தை உருவாக்கி உள்ளது.

சமூக விலகல் (lock down) நம்மை நோய் தொற்றாமல் பாதுகாக்கலாம். ஆனால், மனதில் அழுத்தங்களை ஏற்படுத்தக் கூடிய தாக்கங்கள் இதனால் ஏற்படலாம். பிரத்தியேகமாக நமது குழந்தைகள் அவர்களின் அன்றாட வாழ்வில் ஏற்படும் மாற்றங்களை அவர்கள் எப்படி ஏற்றுக்கொண்டு வாழ முயல்கின்றார்கள் என்பதை நாம் கவனிக்க வேண்டியது அவசியம்.

இம்மாற்றங்களால் அவர்கட்கு பாதிப்பு ஏற்படாமல் அவர்களை எப்படி பாதுகாக்கலாம் என்பதை நாம் முழுமையாக சிந்தித்து அவர்கள் எப்போதும் போல் சகசமாக வாழ்வதற்க்கான வழிமுறைகளை அவர்கட்கு ஏற்படுத்திக் கொடுப்பது அவசியம். ஆகவே, நாம் நமது குழந்தைகட்கு ஆதரவும் உதவியும் அளிப்பதற்க்கான வழிகளைக் கண்டறிவது முக்கியமாகிறது. இவ்வழிவமைப்பிற்க்காக பின் வருபனவற்றில் சிலவற்றை நாம் செய்யலாம்.

  1. நம்முடைய மன அழுத்தங்களை கட்டுப்படுத்துவது

  2. நமது அன்றாட வழமைகளைப் பராமரித்துவருவது

  3. குழந்தைகள் சொல்வதை செவிமடுத்துக் கேட்பது

  4. அவர்களுடன் தொடர்பாடல் கொள்வது

  5. ஒவ்வொருக்கொருவர் தொடர்பில் இருக்க விளையாட்டுகளுக்காக நேரம் ஒதுக்குவது

  6. பிள்ளைகளுடன் சேர்ந்து விளையாடுவது. இதனால் இறுக்கமற்றதளர் நிலையில் இருக்கவும் கவலைகளை வெளிப்படுத்தவும் கவலைகளை சமாளிப்பதற்க்கான வழிகளைக் கண்டறியவும் உங்களுக்கும், பிள்ளைகளுக்கும் உதவமுடியும்.

தனிமைப் படுத்தல் குறித்த விதிமுறைகள் நடைமுறையில் இருக்கும்போது குழந்தைகளுடன் கலந்து உரையாடுவது, சேர்ந்திருப்பது, ஒன்றாய் விளையாடுவது போன்றவை மிகவும் முக்கியமானதாகும். உங்கள் குழந்தைகளின் மன நலனை பேணவும் அவர்களை மகிழ்வாயும், உற்சாகமாகவும் இருப்பதற்கும் அவர்கள் தங்கட்கு ஆதரவும் உதவியும் உண்டு என்று உணர்வதற்க்கு பின் வரும் வழிமுறைகள் உங்கட்கு உதவ கூடும்.

1. உங்களின் அன்றாட அலுவல்களில் பிள்ளைகளுடன் சேர்ந்து விளையாடுவதை ஒரு அங்கமாக்குங்கள். அத்துடன் நீங்கள் அதை எப்படி செய்யப்போகின்றீர்கள் என்பதை அவர்கட்கு தெளிவு படுத்திவிடுங்கள்.  உ.ம்.:

·  விளையாடும் நேரங்கள்

·   அந்த நேரங்களில் உங்கள் முழுக்கவனம் அந்த விளையாட்டில் மட்டுமே இருக்கும் என்பதை தெளிவு படுத்தல்.

·    வேடிக்கையான நடவடிக்கைகளை விளையாட்டில் இணையுங்கள்.

·   எந்தெந்த நாட்களில்/நேரத்தில் என்னென்ன விளையாடலாம் என்பதையும் முன்கூட்டியே தீர்மானித்து தெரியப்படுத்திவிடுங்கள் (அட்டை விளையாட்டுகள் (board games), chess, snakes and ladders etc நீங்கள் விளையாட்டில் இணைக்கலாம்)

மிகவும் முக்கியமாக ஒதுக்கப்பட்ட நேரத்தில் உங்கள் பிள்ளைகள் உங்கள் முழுக்கவனத்தையும் பெறுவார்கள் என்பதை நம்பவைத்து அப்படியே நடந்து கொள்ளுங்கள்.

2. முடிந்தால் பாதுகாப்பான ஓர் இடத்தை விளையாட்டுக்கு என்று ஏற்படுத்துங்கள். இது ஓய்வாக இருந்து அவர்கள் தங்கட்கு பிடித்த காரியங்களை செய்ய கூடியதாய் இருத்தல் மிகவும் அவசியமாகும்.  

3. உங்கள் குழந்தையை வழி நடத்த வைத்து அவ்வழி நடத்தையை பின்பற்றுங்கள்.

குழந்தைகள் வழிநடத்தும் விளையாட்டு என்பது விளையாட்டில் நீங்கள் பங்கு பற்றவேண்டும் என்பதை உங்கள் பிள்ளை தெரிவு செய்ய நீங்கள் அதை ஏற்றுக்கொண்டு பின்பற்றுதல் ஆகும்.

பிள்ளைகளே முடிவுகளை எடுப்பவராகவும் விளையாட்டு விதிகளையும் முறைகளையும் நிர்ணயிப்பவர்களாகவும் இருப்பார்கள்.

இது அவர்கட்கு தாம் செய்வதை நீங்கள் ஏற்றுக்கொள்வீர்கள் என்ற உணர்வையும், நீங்கள் அவர்கள் மேல் நம்பிக்கை வைத்திருக்கின்றீர்கள் என்ற எண்ணத்தையும், தாங்கள் வலிமையும், திறமையும் உள்ளவர்கள் என்ற எண்ணத்தையும் தரும்.

இது உங்கள் குழந்தைகள் பிரச்சனைகட்கு எப்படி தீர்வு எடுக்கின்றார்கள் என்பதையும், மற்றவர்களுடன் எப்படி ஒத்துப்போகின்றார்கள் என்பதையும் அவர்களின் நிர்வாக திறமையையும் உங்கட்கு வெளிப்படுத்தும்.

உங்கள் குழந்தையின் வளர்ச்சியையும் வயதையும் பொறுத்து அவர்கள் வழிநடத்தும் விளையாட்டுகள் மாறுபட்டவைகளாக இருக்கும். அதைப் புரிந்து கொண்டு அவர்கள் தேர்ந்தெடுக்கும் விளையாட்டுகளில் உங்களை ஈடுபடுத்திக் கொள்ளுங்கள். குழந்தையின் வயது எதுவாக இருந்தபோதும் அவர்களை வழிநடத்த அனுமதித்ததின் பின் உங்களுடைய ஈடுபாடு என்ன என்பதை அவர்களே தீர்மானித்து அதை அவர்கள் உங்கட்கு காண்பிக்க நீங்கள் அவர்களை அனுமதிக்க வேண்டும். இது மிகவும் முக்கியமான தொன்றாகும்.

 

4. குழந்தையோடு கதைகளை பகிர்ந்து கொள்ளுதல்

உங்கள் குழந்தைகளுடன் சேர்ந்து இருந்து அவர்களுடன் வாசிப்பு, எழுத்தாக்கம் மற்றும் கதைகள் சொல்வது அவர்கட்கு என்ன நடக்கின்றது, அவர்கள் என்ன சிந்திக்கிறார்கள், எதிர்பார்க்கின்றார்கள் போன்றவற்றை புரிந்து கொள்வதற்க்கு இது ஒரு இலகுவான வழியாகும். அத்துடன் ஒருவருக்கு ஒருவர் கேள்வி கேட்கவும் அதன் மூலம் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளவும் முடியும்.

தம்மைபோன்றஒருகற்பனைகதாபாத்திரம்அவர்களைஅதன்உள்ளேசென்றுதமக்குநடக்கும்விடயங்களைபற்றியஒருபிம்பத்தைஅவர்களால்உருவாக்கவும்அதன்ஊடாகதங்கள்வலிமை, திறன்முதலியவற்றைபுரிந்துகொள்ளகற்பனைகதைகள்பெரிதும்உதவும்.


கவனக்குறைவு அல்லது உயர் செயற்பாட்டு கோளாறு

பெரியவர்கள் சிறுவர்கள்

பெரியவர்கள்

கவனக்குறைவு அல்லது உயர் செயற்பாடு கோளாறு என்பது செறிவு, கவனம் மற்றும் தூண்டுதல் கட்டுபாடு ஆகியவற்றில் உள்ள சிரமங்களால் வகைப்படுத்தப்படும் ஒரு வளர்ச்சிக்  கோளாறு.  இது ஒருவரின் நாளாந்த வாழ்வை பாதிக்கும். 

கிட்டதட்ட  2ல்  இருந்து 3 சதவீத பெரியவர்கள் ADHD யால் பாதிக்கப்பட்டுள்ளனர். ADHD குழந்தை பராயத்தில் தொடங்கி வளர வளர அதன் அறிகுறிகள் மேம்பட்டுக்கொண்டு போகும். கிட்டத்தட்ட 15 வீதமான பெரியவர்கள் ADHDயுடன் எப்போதும் இருப்பார்கள. 

 

அறிகுறிகள்

ADHDயின் முக்கியமானதும் பிரத்தியேகமான அறிகுறிகள் இரண்டு பகுதிகளை உள்ளடக்குகின்றது. ஒன்று கவனக்குறைவு மற்றது அதிவேகதன்மை அல்லது மனக்கிளர்ச்சி. இருப்பினும் பெரியவர்களில் அதிவேகத்தன்மையோ, மனக்கிளர்ச்சியோ வெளிப்படையாக தெரிவது குறைவாக இருக்கும்.

அவதானக்குறைவால் ஏற்படக்கூடிய அறிகுறிகள்:

  • கவனம் செலுத்துவதில் சிரமம்

  • ஒரு நிலை படுத்தி இருப்பதில் சிரமம்

  • அதீத ஞாபக மறதி அல்லது செயல்பாடுகளை ஒழுங்கு படுத்திவதில் சிக்கல்

  • பொருட்களை இழக்கும் போக்கு

மிகை இயக்கத்தால் ஏற்படும் அறிகுறிகள்:

  • அலைச்சல் மற்றும் அமைதியற்ற தன்மை

  • அமைதியாக அதிக நேரம் இருப்பது சிரமம்

  • அமைதியான செயற்பாடுகளில் ஈடுபடுவது சிரமம்

  • தனது முறை வரும் வரை காத்திருப்பதில் சிரமம்

  • ஒரு விசயத்தை முழுமையாக சிந்திக்காமல் அதைப் பற்றி பேசுவது, செயல்படுத்த முனைவது.



ஒரு நபருக்கு ADHD  இருப்பது கண்டறியப்பட அவர் தற்போது பல அறிகுறிகளை கொண்டிருக்க வேண்டும். அறிகுறிகள் அவருக்கு 12 வயதுக்குமுன்பே தொடங்கி இருக்க வேண்டும். இரண்டு  அல்லது அதற்கு மேற்பட்ட அமைப்புகளில் சிரமங்கள் இருக்கவேண்டும் (உ .ம். வீடு, வேலைத்தளம் போன்றவற்றில்). 

ADHDல் மூன்று வகைகள் உள்ளன. இவைகள் ஆவன:

  • மிகவும் அவதானக்குறைவு

  • மிகை இயக்கமும் உத்வேகமும்

  • மேற்குறிப்பிட்ட இரண்டும் சேர்ந்தவை



மிகவும் அவதானக்குறைவு:

மிகை இயக்கமும் உத்வேகத்திலும் பார்க்க மிகவும் அவதான குறைவுடன் இருத்தல். 



மிகை இயக்கமும் உத்வேகமும்:

அவதான குறைவிலும் பார்க்க மிகவும் மிகை இயக்கத்துடனும் உத்வேகத்துடனும் இருத்தல்.

 

இரண்டும் சேர்ந்தவை:

மேற்கூறிய இரண்டு வகையான அறிகுறிகள் அதிக அளவுடன்  இருத்தல்.  

 

காரணிகள்

  1. மரபணு

    மரப்பணு  ரீதியாக வருவதற்கான காரணிகள் அதிக அளவில் உண்டு. ADHD குடும்பங்களில் பரம்பரை பரம்பரையாக வருவதனிலும், யாராவது உறவினர் ஒருவருக்கு இருக்குமாயின் மற்றும் உள்ள குடும்பத்தினருக்கும் வரும் ஆபத்து உண்டு. 

  2. நரம்பியல் காரணிகள்



    ADHD உள்ள பெரியவர்களில், குறுகிய கால நினைவகம், கவனம் செலுத்தும் திறன் ஆகிய வற்றுடன் தொடர்புடைய மூளை மற்றும் மூளையின் செயற்பாடுகளில் சில வேறுபாடுகளை ஆராய்ச்சி கண்டறிந்துள்ளது. கவனம் மற்றும் சுய கட்டுப்பாடு ஆகியவற்றுடன் தொடர்புடைய மூளை செயல் பாடுகளில் வேறுபாடுகள் காணப்படுகின்றன. அதாவது கவனத்தை செலுத்தும் திறன், அத்துடன் உண்ர்ச்சி, சிந்தனை மற்றும் நடத்தை ஆகியவற்றை நிர்வகிக்கவும். 



  3. சுற்றுச்சூழல் 

சில சுற்றுச்சூழல் காரணிகளும் ADHDயில்  வளர்ச்சியில் பங்கு வகிக்கலாம். இவைகளில் அடங்கும் சில காரணிகளாவன:

  • கர்ப்பம் மற்றும் பிறப்புக்காரணிகள்

கர்ப்ப காலத்தில் புகைபிடித்தல், மது மற்றும் போதை பொருள் பயன்பாடு மற்றும் மன அழுத்தம், அத்துடன் குழந்தைகளின்  குறைபிறப்பு, எடை மற்றும் குறை பிரசவம் ஆகியவை ADHD யுடன் தொடர்புடைய காரணிகளாகும்.

  • ஆரம்பகால வாழ்க்கை உறவுகள் மற்றும் கற்றுக்கொள்ள வாய்ப்புகள் இல்லாமை, நித்திய சண்டை சச்சரவு உள்ள குடும்பம், அல்லது சுய கட்டுப்பாடு, கவனம் மற்றும் செறிவுக்கான திறன்களை கற்றுக்கொள்ள நல்ல வாய்ப்புகள் இல்லாத குடும்பத்தில் வளர்வது இந்தப் பகுதிகளில் சிரமங்களுக்கு வழிவகுக்கும்.

  • சில சுற்றுச்சூழல் நச்சுக்கள்

 ஈயம் போன்ற நச்சுக்கள் மூளை வளர்ச்சி மற்றும் நடத்தையை பாதிக்கும் 

சிகிச்சை முறைகள் 

 மதிப்பீடு:

பொது மருத்துவர், மனநல மருத்துவர், உளவியலாளர் குழுவால் செய்யப் படுகிறது. உளவியல் உத்திகளுடன் மருந்துகளைப் பயன் படுத்துவது சிறந்த முடிவுக்கு வழிவகுக்கும். 

 

கவனம் மற்றும் கவனத்தை மேம்படுத்துவதற்கான குறிப்புகள்

  1. கவனச்சிதறலைக் குறைப்பது

     உங்கள் வேலை இடத்தை கவனச்சிதறல் இல்லாமல் அமைக்கவும் கதவைவிட்டு (மற்றவர்கள் வந்து செல்லும் இடம்) யன்னலை விட (வெளியில் இருந்து திசை திருப்பல்) மற்றும் உங்கள் வேலை இடத்தில் ஒழுங்கீனம், மின்னணு ஊடகம், மற்றும் பிற கவனச்சிதறல்கள் இல்லாமல் பார்த்து கொள்ளுங்கள். 



  2.  ஏற்பாடு செய்யுங்கள் 

    உங்கள் நாளை ஒழுங்கமைக்க நேர மேலாண்மை மற்றும் நிறுவன உத்திகளை பயன்படுத்தவும். மேலும் ஒழுங்கமைக்க:

    • இலக்குகளை நிறுவுங்கள்

    • செய்ய வேண்டியவைகளை எழுதி, அன்றைய பணியை/வேலையை திட்ட மிடுவதற்கும், முன்னுரிமை அளிப்பதற்கும் பயன்படுத்துங்கள்.

    • நாட்குறிப்புகளை அமைத்து நினைவவூட்டலை அமையுங்கள்.

    • ஒத்தபணிகளை குழுக்களாக்கி ஒன்றாய் செய்வதற்கு முயலுங்கள்.



  3. பணிகளை ஒத்த துண்டுகளாக உடைக்கவும் 

    ஒரே மாதிரியான அல்லது ஒத்தபணிகளை ஒழுங்கமைக்கவும், சுலபமாக முடிக்கக்கூடியவைகளை உங்கள் மனம் புத்துணர்ச்சியுடனும், உங்கள் செறிவு குறைவதற்கு முன்பும் செய்ய முயலுங்கள். அப்போ அவைகளை எளிதாக செய்ய முடியும். 

  4.  செயல்பாடுகள் மற்றும் பணிகளில்  இடை வெளிகளைச் சேர்க்கவும்

    வேலைகள் அல்லது பணிகளுக்குப்  பின்பு இடைவெளிகள் எடுப்பது அடுத்த பணிகளில் மேலும் கவனம் செலுத்த உதவும்.

  5.  சிக்கல் தீர்க்கவும் வழிமுறைகளை பயன் படுத்துங்கள் 

    ஒரு பிரச்சனையை வரையறுப்பது, மற்றவர்களுடன் கலந்துரையாடி தீர்வுகளை ஆலோசிப்பது, ஒரு தீர்வை தேர்ந்தெடுத்து அதை முயற்ச்சி செய்வது அதன் பின்பு பலாபலன்களை மதிப்பாய்வு செய்வது போன்றவை சிக்கல் தீர்க்கும் வழிமுறைகளில் சிலவாகும்.

சிறுவர்கள்

கவனக்குறைவு அல்லது உயர் செயற்பாடு கோளாறு (ADHD) என்பது செறிவு, கவனம் மற்றும் தூண்டுதல் கட்டுபாடு ஆகியவற்றில் உள்ள சிரமங்களால் வகைப்படுத்தப்படும் ஒரு வளர்ச்சிக்  கோளாறு.  இது ஒருவரின் நாளாந்த வாழ்வை பாதிக்கும். 

ADHD உள்ள குழந்தைகள் அமைதியாக உட்கார்ந்து கொள்வது, செய்ய சொல்பவைகளை  நடைமுறைப்படுத்துவது, அமைதியாக இருந்து செய்யவேண்டியவைகள் போன்றவற்றை செய்வதில் சிரமப்படுவார்கள். அத்துடன் ஒரு விசயத்தை ஆலோசிப்பதற்க்கு  முன் செயல் பட முனைவார்கள். அவர்கள் தங்கள் வேலையில் கவனம் செலுத்த முயன்றாலும் கூட ADHD உள்ள குழந்தைகள் பெரும்பாலும் தங்களை சுற்றி நடக்கும் விசயங்களால் சுலபமாக திசைதிருப்பப் படுகிறார்கள். இந்த சிரமங்களின் காரணமாக அவர்கள் வகுப்பில் இருப்பதிலும், நண்பர்களை உருவாக்குவதிலும் அவர்களை வைத்திருப்பதிலும் சிரமங்கள் உடையவர்களாய் இருப்பார்கள். 

 

வகைகள்/அறிகுறிகள் 

சிறுவர்கள் அனுபவிக்கும் ADHDயை மூன்று வகைகளாக பிரிக்கலாம். 

  1. முக்கியமாக, அவதானம் செலுத்துதல் மிகவும் குறைவாக இருத்தல்:

    இவர்கள் இயக்கும் உத்வேகம் உடையவர்களாய இருந்த போதும் விசயங்களில் மிகவும் குறைவாக அவதானம் செலுத்துவார்கள். 

  2. முக்கியமாக அதிவேக தூண்டுதல்:

    இவர்கள் பெரும்பாலும் அவதானத்துடன் இருப்பதைவிட அதிவேகத்தன்மையும், மனக்கிளர்ச்சிக்கான அறிகுறிகளுடனும் காணப்படுவர். 

  3.   மேற்கூறிய இரண்டும் கலந்த அறிகுறிகள்   

 

காரணிகள்

  1. மரபணு

    மரப்பணு  ரீதியாக வருவதற்கான காரணிகள் அதிக அளவில் உண்டு. ADHD குடும்பங்களில் பரம்பரை பரம்பரையாக வருவதற்க்கான வாய்பும், யாராவது உறவினர் ஒருவருக்கு இருக்குமாயின் மற்றும் உள்ள குடும்பத்தினருக்கும் வரும் ஆபத்து உண்டு.

  2. நரம்பியல் காரணிகள்

    ADHD உள்ள பெரியவர்களில், குறுகிய கால நினைவகம், கவனம் செலுத்தும் திறன் ஆகிய வற்றுடன் தொடர்புடைய மூளை மற்றும் மூளையின் செயற்பாடுகளில் சில வேறுபாடுகளை ஆராய்ச்சி கண்டறிந்துள்ளது. கவனம் மற்றும் சுய கட்டுப்பாடு ஆகியவற்றுடன் தொடர்புடைய மூளை செயல் பாடுகளில் வேறுபாடுகள் காணப்படுகின்றன. அதாவது கவனத்தை செலுத்தும் திறன், அத்துடன் உண்ர்ச்சி, சிந்தனை மற்றும் நடத்தை ஆகியவற்றை நிர்வாகிக்கும் திறன் குறைந்தவர்களாய் இருக்கக்கூடும். 

  3. சுற்றுச்சூழல் 

    சில சுற்றுச்சூழல் காரணிகளும் ADHD உள்ளவர்களின் வளர்ச்சியில் பங்கு வகிக்கலாம். இவைகளில் அடங்கும் சில காரணிகளாவன:

  • கர்ப்பம் மற்றும் பிறப்புக்காரணிகள்

    கர்ப்ப காலத்தில் புகைபிடித்தல், மது மற்றும் போதை பொருள் பயன்பாடு, மற்றும் மன அழுத்தம், அத்துடன் குழந்தைகளின்  குறைபிறப்பு, எடை மற்றும் குறை பிரசவம் ஆகியவை ADHD யுடன் தொடர்புடைய காரணிகளாகும்.

  • ஆரம்பகால வாழ்க்கை உறவுகள் மற்றும் கற்றுக்கொள்ள வாய்ப்புகள் இல்லாமை, நித்திய சண்டை சச்சரவு உள்ள குடும்பம், அல்லது சுய கட்டுப்பாடு, கவனம் மற்றும் செறிவுக்கான திறன்களை கற்றுக்கொள்ள நல்ல வாய்ப்புகள் இல்லாத குடும்பத்தில் வளர்வது போன்றவை ADHDக்கு காரணிகளாகலாம்.

  • சில சுற்றுச்சூழல் நச்சுக்கள்

    ஈயம் போன்ற நச்சுக்கள் மூளை வளர்ச்சி மற்றும் நடத்தையை பாதிக்கும் 

 

சிகிச்சை 

மதிப்பீட்டைப் போலவே சிகிச்சையும் பெரும்பாலும் நிபுணர்களின் குழுவால் வழங்கப்படுகின்றது. பொதுவாக ஒரு உளவியலாளர் மற்றும் குழந்தை மருத்துவர்கள் இணைந்து சிகிச்சையை செய்வார்கள்.  

இவர்கள் பெரும்பாலும் பெற்றோருடனும், குழந்தையுடனும் இணைந்தே செயல்படுவார்கள். அத்துடன் குழந்தையின் கல்வியாளர்கட்கு ஆதரவையும் ஆலோசனைகளையும் வழங்குவார்கள். 

 குழந்தையின் கல்விக்கும், கற்றலுக்கும் உளவியலாளர், பெற்றோர்கள் மற்றும் கல்வியாளர்கள் இணைந்து சிறந்த கவனிப்பையும், ஆதரவையும் வழங்கவேண்டும். பெற்றோர்கள் இந்த குழுவின் ஓர் அங்கமாக உணர்ந்து, இணைந்து செயல்படுவது அவசியம். 

குழந்தை மற்றும் அவரது குடும்பத்திற்கு ஏற்ப சிகிச்சை முறைகள் மாறுபடும். பிற வளர்ச்சி கோளாறு இல்லாததும், லேசான ADHD உள்ள குழந்தைகள் பொதுவாக குடும்ப ஆதரவுடன், நடத்தை மேலாண்மை உத்திகளை சுற்றி மிகவும் சிறப்பாக செயல்படுவார்கள்.    

நிர்வாகிக்க கடினமான அறிகுறிகள் உள்ள குழந்தைகள் அல்லது வித்தியாசமானதும், பல்வேறு வகையான காரணிகளை உடைய குழந்தைகள் மருந்துகளும் உளவியல் உத்திகளும் இணைந்த சிகிச்சைகள் மூலம், பிரத்தியேகமான நடத்தை மேலான்மை உத்திகளினால் பெரும்பாலும் பயன்  அடைவார்கள்.

ADHD உள்ள குழந்தைகட்கு உதவுவதற்கான குறிப்புகள் 

  • பாராட்டுதல்

பாராட்டுதல்கள் உடனடியானதாகவும், நீங்கள் ஊக்குவிக்க விரும்பும் நடத்தைகளை முன்னிலை படுத்தி அவைகட்கு வெகுமதி அளித்து குழந்தைகளை ஊக்குவிப்பவைகளாக இருக்கவேண்டும். 

  • கவனம் செலுத்துதல்

குழந்தைகளுடன் கண் பார்வை தொடர்பு கொள்ளுதல், அவர்கள் கூறுபவைகளை  கவனத்துடன் கேட்பது, அத்துடன் அவர்கட்கு அன்பாகவும் அக்கறையுடனும் பதில் அளித்தல். 

  • கவனம் செலுத்த நேரம் செலவிடல்

உங்கள் பிள்ளைக்கு ஆர்வமுள்ள ஒரு செயல் பாட்டை தேர்ந்தெடுத்து அவர்கட்கு உத்தரவுகள் இடாமலும், எதிர்மறை அற்ற செயல் பாடுகளுடனும் அவர்களுடன் நேரத்தை கழியுங்கள். 

  • பயனுள்ள பணிப்புகளை பயன்படுத்துதல்

    • பணிப்புகளை தேவைப்படும் போது மட்டுமே பயன் படுத்துதல்.

    • பண்ணிப்புகளை எளிதானதாகவும், தெளிவானதாகவும் கொடுத்தல்.

    • உங்கள் பணிப்புகளில் குழந்தை கவனம் செலுத்துவது முக்கியமாகும். அத்துடன் அவர்கள் அவைகட்கு இணங்குவதற்கு நேரம் கொடுப்பதுவும் அவசியமானதும் அவர்கட்கு உதவியாகவும் இருக்கும். 

    • நீங்கள் சொல்வதை கேட்பதற்க்கும் அதை நடைமுறை படுத்துவதையும் பாராட்டுவது அவர்களின் நேர்மறையான நடத்தைகளை வலுப்படுத்தும்.  

 ஆட்டிசம்

(Autism Spectrum Disorder (ASD))

முன்னுரை

இது நரம்பு தொடர்பான வளர்ச்சிக் குறைபாடு. ஒரு நபரின் சிந்தனையை, உணர்வை, தன்மையை, அவரை சுற்றி இருப்பவைகளை அவரே முழுமையாக அறிந்து அனுபவிக்க கூடிய வளர்ச்சி இன்மையால் ஏற்படும் தன்மை. 

இது குழந்தை பருவத்தில் தொடங்கி வாழ் நாள் முழுவதும் தொடரும் வளர்ச்சி இன்மை கோளாறாகும். 

இதுஉடையகுழந்தைகள்இரண்டுமுக்கியமானபகுதிகளில்தாமதங்களையும்வேறுபாடுகளையும்வெளிப்படுத்துகின்றனர்.

  1. சமூகத்தில் மற்றவர்களுடன் பழகுதல், கலந்து உரையாடுதல், சுமூகமாக சேருதல்/ தொடர்பு கொள்ளல் போன்றவை.

  2. தங்கள் நடத்தைகளை வெளிப்படுத்தல் அல்லது ஆர்வம் காட்டுதல் போன்றவை. 

இவைகையான தாமதங்களை இவர்களில் சிலர் மீண்டும் மீண்டும் செய்வார்கள் அல்லது செய்யாமலே இருப்பார்கள். இந்த இரண்டு விசயங்களிலும் சிலர் பல அறிகுறிகள் உள்ளவராகவும் வேறு சிலர் சிலவற்றை மட்டுமே மீண்டும் மீண்டும் வெளிப்படுத்துதல் அல்லது நிலையானதாய் வெளிப்படுத்துபவர்களாகவும் இருப்பார்கள். 

இவர்கள் வளர வளர அறிகுறிகளில் மாற்றங்கள் ஏற்படலாம் அல்லது குறைபாடுகளில் முக்கிய பகுதிகள் அப்படியே கூட இருக்கலாம். 

கிட்டதட்ட 65 சதவீதமானோர் சிந்தனை/ அறிவு சார்புடை இயலாமையை கொண்டுள்ளவர்களாகவும், ஒரு சிறிய சதவீதமானோர் மிகவும் குறைந்த புத்திசாலித்தனம்/ அறிவுசார்வுடமை உள்ளவர்களாக இருக்கலாம். 

ஆதலினால் இவர்களின் தேவைகள் ஒருவருக்கு ஒருவர் மிகப் பெரிய அளவில் வித்தியாசப் படுகின்றன. சிலருக்கு மிக அதிக அளவிலான ஆதரவும், மேற்பார்வையும், உதவிகளும் வாழ் நாள் முழுவதுவும் தேவைப்படும்.

அதேவேளைகளில் வேறுசிலர் சுயமாகவும், சுதந்திரமாகவும் இயங்கக் கூடியவர்களாவளர்வார்கள். 

100 பேரில் ஒருவரை இந்தக் கோளாறு பாதிக்கின்றதென ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

பிரத்தியேகமாக இந்தக் குறைபாடு பெண்குழந்தைகளை விட ஆண்குழந்தைகளை அதிகம் பாதிக்கின்றதென்றும், பிரத்தியேகமாக நாலுக்கு ஒன்று என்ற விகிதாசாரத்தில் ஆண்/பெண் குழந்தைகளிடையே இந்த பாதிப்பு இருப்பதாகவும் ஆராய்ச்சிகள் கூற முனைகின்றன.

 அதே வேளையில் பெண் பிள்ளைகள் தொடர்பான ஆராய்ச்சிகள் மிகவும் குறைந்த அளவில் செய்யப்பட்டிருக்கலாம் அல்லது முழுமை அடையாமலும் இருந்திருக்கலாம் என்றும் நம்பப்படுகின்றது. 

இந்த கோளாற்றின் பாதிப்பு பிள்ளைக்கு பிள்ளை மாறுபட்டதாக இருந்தபோதும் அவரவர்கட்கு பொருத்தமான பராமரிப்புகளினால் ஒவ்வொருவருக்கும் உதவ முடியும். 

அறிகுறிகள்

சமூகத்தில் உள்ளவர்களுடன் கலப்பதுவும, கலந்து உரையாடுவதுவும்.

சமூக வேறுபாடுகள், சாதாரணமாக நாம் ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுப்பது, இணைந்து போவது, உறவுகளை புரிந்து கொண்டு அனுசரித்துப்போவது, போன்றவற்றை சுற்றியே இருக்கின்றன.

ஆனால் ASD உள்ள பிள்ளைகட்கு இடையே கலந்துரையாடும் திறன் ஒருவருக்கு ஒருவர் மாறுபட்ட்தாக இருக்கும். சில பிள்ளைகள் பேச்சு திறமை குறைந்தவர்களாகவும் அதேவேளையில் வேறு சில பிள்ளைகள் பேச்சு திறனிலும் மொழி ஆற்றலிலும் மிக சிறந்தும் காணப்படுவார்கள். அதேவேளையில் மொழி ஆற்றல் நிறைந்து இருந்தும் ஆக்க பூர்வமான கலந்துரையாடல்களை பேணுவதில் சிரமப்படுவார்கள். இவர்கள் ஒன்றுக்கொன்று சம்பந்தம் இல்லாத வித்தியாசமான விசயங்களை கூறலாம்.

சம்பாசனைகளின் போது மென்மையற்றும் நளின குறைவான வார்த்தைகளை பிரியோகிக்கலாம். அத்துடன் அவர்கள் பேசும் விசயத்தில்  மற்றவர்கள் ஆர்வம் இழந்து விட்டதை உணராமல் சொன்னதையே திரும்பத்திரும்ப அளவுக்கு அதிக நேரம் சொல்லிக்கொண்டிருப்பார்கள். பல வேளைகள் பேச எடுத்த விசயத்திற்க்கு சம்பந்தம் இல்லாதவற்றையும்  பேசுவார்கள்.

வாய்மொழி அல்லாத தகவல் தொடர்புகளான பார்வை, உடல், முகம் போன்றவற்றினால் வெளியிடப்படும் உணர்வலைகளை அறிந்து கொள்ளவும் அவைகளை புரிந்து தங்கவைத்து கொள்வதிலும் இவர்கள் சிரமப்படுவார்கள்.

 உடல் பாகங்களால் காட்டப்படும் சைகைகளை முழுமையாக புரிந்து கொள்ள முடியாதவர்களாகவும் இருப்பார்கள்.

 இவர்களில் சிலர் மற்றவர்களுடன் சேராமல் தனிமையில் இருப்பவர்களாகவும் அல்லது மற்றவர்களிடமிருந்து ஒதுங்கியும் இருப்பார்கள்.

அதேவேளையில் ASD உடைய எல்லோருமே மற்றவர்களிடமிருந்து ஒதுங்கி இருப்பார்கள் என்றும் கூறமுடியாது. சிலர் மற்றவர்களுடன் சேர்ந்து இருப்பதில் மிகவும் ஆர்வம் உடையவர்களாயும் மற்றவர்களில் பாசமுடையவர்களாயும் இருப்பார்கள்.

அதேவேளையில்அவர்கட்குமிகவும்பிடித்தவிசயங்களைபற்றிசம்பாசனைஇல்லாதபோதுஅந்தசம்பாசனைகளில்ஆர்வம்காட்டாமலும்மற்றவர்கள்பேசுவதைகேட்காமலும்இருப்பார்கள்.

நடைமுறைகளும் ஆர்வமும் 

 ASD உள்ளவர்கள் பரந்துபடாத, அதாவது மிகவும் குறைவான விசயங்களில் மட்டுமே ஆர்வம் உடையவர்களாயும், ஒரே விசயத்தையோ விளையாட்டையோ திரும்பத்திரும்ப விளையாடுபவர்களாயும், பல விசயங்களை தெரிந்திருந்தால் கூட ஒரு விசயத்தை பற்றியே திரும்ப திரும்ப  பேசுபவர்களாயும், ஒரே தொலைகாட்சி நிகழ்ச்சியை மீண்டும் மீண்டும் பார்ப்பவர்களாயும், ஒரு விளையாட்டு பொம்மை மீதே கவனம் செலுத்துபவர்களாயும் இருப்பார்கள். 

 இவர்கள் கற்பனைக் குறைவான விளையாட்டு திறனை வெளிப்படுத்திய போதும் விளையாட்டு பொருட்களையும், பொம்மைகள் போன்றவற்றையும் மாறுபட்ட, வித்தியாசமான முறைகளில் பாவிப்பவர்களாயும் (உ.ம். ஒரே கோட்டில் விளையாட்டு பொருட்களை நிறுத்துவது, பொம்மை வாகனங்களின் சக்கரங்களை சுழற்றி அவற்றில் கவனம் செலுத்துவது, பொம்மைகளில் இருந்து வரும் வெளிச்சங்களில் கவனம் செலுத்துவது) இருப்பார்கள். 

 சில பிள்ளைகள் மாறுபட்ட அல்லது வித்தியாசமான நடைமுறைகளில் தங்களை ஈடுபடுத்திக் கொள்வார்கள் (உ.ம். கைகளால் சிறகடித்து பறப்பதுபோல் அசைப்பது அல்லது ஒரே வேகத்தில் உடலை அசைத்து ஆடுவது போன்றவை). இவைகள் அவர்களுள் எழும் உற்சாகத்தினதும் படபடப்பினதும் அறிகுறிகளாகும். 

 இவர்களில் அநேகர் மாற்றங்களிலும் மாறுபாடுகள் ஏற்படும்போதும் அவைகளை நடைமுறைப்படுத்துவதில் சிரமப்படுவார்கள். அதேவேளையில் முற்கூட்டியே தயார்படுத்துவதின் மூலம் மாற்றங்களை ஏற்பதையும், நடைமுறை படுத்துவதையும் இலகுவாக்கலாம். 

காரணிகள்

ASD கோளாறுக்கு தனியான ஒரு காரணி இருக்க வாய்ப்பில்லை. சுற்றுச் சூழல், மரப்பணு, உயிரியல் போன்றவை காரணிகளுக்கான வகுபாகங்களை வகுக்கலாம். பொதுவாக மூளை வளர்ச்சியின் குறைவும் மற்றும் பிற வளர்ச்சிக் கோளாறும் காணப்படலாம். 

மதிப்பீடு

பிரத்தியேகமாக ASD  மதிப்பீடு பல்வகை வைத்திய தொழில் நுட்பவாதிகளும் அதுசார் தொழில் நுட்ப உதவியாளர்கள் கொண்ட குழுவொண்காலும் செய்யப் படுகின்றது. பொதுவாக இந்த குழுவில் குழந்தை வைத்திய நிபுணர், குழந்தை மனநல மருத்துவர், குழந்தை உளவியலாளர், பேச்சு நோயியல் நிபுணர் போண்றோர்கள் உள்ளடக்கப்படுவார்கள். சிலவேளைகளில் தொழில் சிகிச்சையாளர்கள் போன்றோரும் உள்ளடக்கப் படுவார்கள். 

 வழக்கமாக உங்கள் பொது வைத்தியர் குழந்தை வைத்திய நிபுணரிடமோ அல்லது குழந்தை மனநல மருத்துவரிடமோ பரிந்துரைப்பார்கள். இவர்களில் ஒருவர் உங்கள் குழந்தைக்கு ASDயின் அறிகுறிகள் இருப்பதாக உணர்ந்தார்களானால் மேலதிக மதிப்பீட்டுக்கும், நோயை முழுமையாக அறிதலுக்கும் மற்றும் குணப்படுத்தலுக்கும் ஓர் குழந்தை உளவியலாளருக்கோ அல்லது வேறு மருத்துவ நிபுணருக்கோ பரிந்துரைப்பார்கள். 

 தாய், தந்தையார், குடும்பம் மற்றும் குழந்தையை கவனிப்பவர்கள் குழந்தையின் நோயைகண்டறிவதிலும் குணமாக்குவதிலும் மிகவும் காத்திரமான பங்கை அளிக்க வேண்டும். 

 நோயை மதிப்பீடு செய்வதற்க்கு குழந்தையின் தாய், தந்தையிடம் குழந்தியின் வளர்ச்சி, அவர்களின் பலம், பலவீனம், அவர்கள் படும் காய்டங்கள் நடைமுறைகள் பற்றி குழந்தை உளவியலாளர் கேள்விகளை கேட்பார். மதிப்பீடு, முக்கியமாக குழந்தையின் பின்புலம், வளர்ச்சி வரலாறு, தற்போதைய நிலை போன்றவற்றை கண்டறிந்து அதற்கான காரணிகளில் சார்ந்திருக்கும். 

 குழந்தையின் நடத்தைகளின் தன்மைகள், அவர்கள் மற்றவர்களுடன் எப்படி தொடர்புகளை ஏற்படுத்துகிறார்கள், அவைகளை எப்படி பேணுகின்றார்கள் என்பவற்றை முழுமையாக புரிந்து கொள்வதற்காக குழந்தை உளநலவியலாளர்கள் உங்கள் குழந்தையை வேறுபட்ட சூழல்களில் (உ.ம். முற்கல்வி நிலையங்கள், பாடசாலைகள், வீடு போன்ற இடங்கள்) அவதானிப்பார்கள்.    

 மேலும்உங்கள்குழந்தையின்படிப்புதிறன், மொழி, உரையாடலும்உரையாடும்முறை, பலதரப்பட்டநாளாந்தசெயற்திறன்போன்றவற்றைகுழந்தையின்வயதுக்குஏற்றவாறுஉளநலவியலாளர்மதிப்பீடுசெய்வார்.

சிகிச்சை

குழந்தையின் நடைமுறைகளில் மாற்றங்களை ஏற்படுத்துவதினாலும் அவர்களின் செயற்திறனை மேம்படுத்தி ஊக்குவிப்பதினாலும் ASD  உள்ள குழந்தைகளில் குணமடைவதில் மிகவும் முன்னேற்றத்தை அடைய முடியும் என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றன. 

 இவ்வகையான அணுகு முறைகள் ASD உடையவர்களில் தென்படும் பலவகையான காரணிகளை (உ.ம். மொழி பயிற்பில் கஸ்டமும் தாமதமும், சமூகத்திறன்கள், கலந்துரையாடல்கள், அறிவாற்றல், செயல் முறைகள், விளையாடுதல் போன்றவை) குணப்படுத்த ஏதுவானவைகளாய் அமையும். 

 அனேகமாய் குணப்படுத்தலுக்கான தலையீடுகள் தேவையான நடைமுறைகளை அதிகரிக்க செய்யவும், தேவையற்ற பழக்க வழக்கங்களையும் நடைமுறைகளையும் குறைக்கவும், சமூகத்தில் கலந்து கொள்வதற்க்கு தேவையான நடைமுறைகளை அதிகரிக்கவும் கலந்துரையாடல் விளையாடும் திறன், நிர்வகிக்கும் திறன், மற்றவர்களுடன் தொடர்புகள் ஏற்படுத்தும் முறைகள் போன்றவற்றில் அதிக கவனம் செலுத்துபவைகளாக அமையும். 

 தாய், தந்தையரும் குழந்தையை கவனித்து பராமரிப்போரும் குணப்படுத்தலுக்கான தலையீடுகள் ஒவ்வொன்றிலும் மிகவும் முக்கியமான பங்களிப்பவர்களாவார்கள்.

 உங்கள் பிள்ளைக்கு குணமடைதலுக்கான வழிமுறைகளை வீட்டில் பயிற்ச்சி கொடுப்பது எப்படி என்று அறிந்து கொள்வதற்க்கு குணமடைவதற்க்கான தலையீடுகள் நடக்கும் போதெல்லாம் நீங்களும் அதில் கலந்து கொள்ள வேண்டும். 

 சிகிச்சை அமர்வுகள் அல்லது குணமடைதலுக்கானதையீட்டு குழுக்களில் உள்ள உளவியலாளர்கள் மற்றும் வைத்திய வல்லுணர்கள் பிள்ளையின் கல்வியாளர்கள்/ ஆசிரியர்கள் போன்றோருடனும் இணைந்து பிள்ளையின் கற்றல் மற்றும் நடத்தை போன்றவற்றை முன்னேற்றுவதற்கான வழிமுறைகளை ஏற்படுத்தி அவைகளை ஒரு நிலையானவைகளாக வீடு, முன்பள்ளி, பள்ளிக்கூடம் போன்ற இடங்களில் ஸ்தாபிக்க உங்களுடன் இணைந்து செயற்படுவார்கள். 

 பிள்ளையில் ASDக்கான அறிகுறிகள் தோன்றும் போதே அதை குணப்படுத்துவதற்க்கான உதவிகளை அணுகுதல் மிகவும் முக்கியம். 

 அறிகுறிகள் ஆரம்பிக்கும் போதே சிகிச்சைக்கான தலையீடுகளை தொடங்கும் பட்சத்தில் நீண்ட காலத்திற்க்கான நற்பயனை அடைய வழிவகுக்கும் என்பதால் ஆரம்பத்திலேயே உதவிகளை அணுகுவதும் வைத்திய நிபுணர்களின் ஆலோசனைகளை நடைமுறை படுத்தலும் மிகவும் முக்கியமானதாகும். 

ASD உள்ள பிள்ளைகட்கு உதவுவதற்க்கான குறிப்புகள் 

உங்கள் பிள்ளையில் திறமையும் நற்தகுதிகளையும் பயன் படுத்துங்கள்  

ASD உள்ள பிள்ளைகட்கு பலவகையான திறமைகள் இருக்கலாம். சிலருக்கு இசை ரீதியான வல்லமை/திறமை இருக்கலாம், வேறு சிலருக்கு கணிததிறனே, வேறு தனிப்பட்ட பாடங்களில் திறனே அல்லது எதாவது ஒரு விசயத்தில் ஆழ்ந்த அறிவோ கூட இருக்கலாம். 

 அவர்களின்செயற்பாடுகளில், திறமைகளில், அறிவுத்திறன்நிறைந்தவிடயங்களில்ஆர்வத்தைஊக்குவிப்பதன்மூலமும்அவர்கள்செயற்பாடுகளில்ஆர்வம்காட்டுதல்மூலமும்அவர்களின்கலந்துரையாடல்கள், ஊடாடுதல்போன்றவற்றைதூண்டுவிப்பதற்க்கும்வளர்ப்பதற்க்கும்அவரவர்களிடம்இருக்கும்தனிதனியானதிறன்களைபாவிப்பதன்மூலம்அவர்களின்ஆர்வத்தைதூண்டவும்ஈடுபாட்டைஏற்படுத்தவும்முடியும்.

உங்கள் பிள்ளைகள் அதிகம் விரும்பாத பகுதிகளில் ஆர்வத்தை ஏற்படுத்த  அவர்கள் விரும்புவதையும் அவர்களின் சிறப்பு ஆர்வங்களையும் பயன் படுத்துங்கள்:

ASD உள்ள குழந்தைகள் சில விசயங்களில் அதிதீவிரமான ஆர்வமுடையவர்களாய் இருக்கலாம். பல முக்கியமான விடயங்களில் தங்களை ஈடுபடுத்திக் கொள்வதில் ஆர்வமே காட்டாமல் இருக்கலாம்.

அவர்கட்கு ஆர்வ நிறைந்த விசயங்களில் இருந்து அவர்களை திசைதிருப்ப முயல்வதிலும் பார்க்க பிற விசயங்களில் செயல்களில் அவர்களின் ஆர்வத்தை ஊக்குவிப்பதற்க்கு அவர்கள் அதிகம் விரும்பும் விசயங்களை தூண்டு கோல்களாக பயன் படுத்தி அதன் மூலம் உங்கட்கும் பிள்ளைக்கு இடையே உள்ள ஈடுபாட்டை பலப்படுத்தவும், பிற விசயங்களில் அவர்களின் உற்சாகத்தை மேம்படுத்த முடியுமா என்பதை பார்க்கவும். 

அவர்களின் ஆர்வங்களை பகிர்ந்து கொள்ளுங்கள்:

  • உங்கள் குழந்தையுடன் சேர்ந்து விளையாடுங்கள்

  • விளையாட்டின் போது அவர்களை முன்னிலை படுத்தி பின்தொடருங்கள்

  • உங்கள் விளையாட்டைப் பற்றி அவர்களுடன் பேசுங்கள்

  • அவர்களின் செயல்களை கவனியுங்கள். அத்துடன் நீங்கள் அவர்களுடன் என்ன செயகின்றீர்கள் என்பதையும் அவதானியுங்கள்.

  • காலப்போக்கில் நீங்கள் அவதானித்தவைகட்கு அமையவும் இருவருக்குமிடையே ஏற்படக்கூடிய பரிந்துணர்வுகளின் அடிப்படையிலும் இருவருக்கு மிடையேயான தொடர்புகளை மேம்படுத்தி அவற்றை பேணவும் முடியலாம்.

  • இருவரும் மாறி மாறி விளையாடும் முறையை, அவர்கள் அறிய அவர்களுடன் நீங்களும் சேர்ந்து விளையாடுவது உதவி புரியும். அத்துடன், விளையாட்டின் மூலம் இருவரும் அடையும் மகிழ்வு நிறைந்த அனுபவங்களை பகிரவும் உதவும்.

விளையாட்டில் படிப்படியாக சிறு சிறு மாற்றங்களை ஏற்படுத்துங்கள்:

  • சிறு சிறு மாற்றங்களை படிப்படியாக ஏற்படுத்துவது அவர்களின் கற்பனைத் திறனை மேம்படுத்தவும் சிறிய மாற்றங்களை சகித்து கொள்ளவும் உதவும்.

  • மாற்றங்களை ஏற்படுத்தும் போது உங்கள் பிள்ளையின் முதல் யோசனையிலிருந்து தூரப்படாமலும் விளையாட்டின் கருப்பொருளை சுற்றி உள்ள அர்த்தங்களை இழக்காமலும் இருக்க வேண்டும்.

உதாரணத்திற்க்கு: ஒரு பொருளை மேலே எறிந்து அது கீழே விழுவதைப் பார்த்து உணர்வு பூரணமான உவகையுடன் கூடிய அனுபவத்தை உணரலாம். இவ்வேளைகளில், நீங்களும் அவர்களுடன் இணைந்து மென்மையான பொருட்களை (மென்மையான பந்து, இறகுகள், பலூன்கள் போன்றவை) மேல் எறிந்து விளையாடி இந்த விரிவு படுத்தப்பட்ட விளையாட்டுகளின் போது அவர்கள் வெளிக்காட்க்கும் எதிர்வினை உணர்வுகளை அவதானத்தில் அவசியமாகும். 

பிள்ளைகளின் சிறப்பு ஆர்வங்களை மற்றைய நடவடிக்கைகளில் சேர்ப்பது  (அவர்கள் மிகவும் விரும்பும் பொருளையோ அல்லது விளையாட்டையோ)

உதாரணத்திற்க்கு, Thomas the Tank Engine என்ற கதை தொடரில் சில பிள்ளைகள் ஆர்வம் உடையவர்களாய் இருப்பார்கள். அவற்றில் வரும் கதாபாத்திரங்களை பாவிப்பது அல்லது அவைபோல் நடிப்பது போன்றவற்றை உபயோகிப்பதன் மூலம் அவர்களின் எண்ணும் திறனை, நிறங்களை கண்டறிதல் போன்றவற்றை மேம்படுத்தவும் சமூக தொடர்பாடல்களை ஊக்குவிக்கவும் உதவலாம்.

 இப்படியான நடவடிக்கைகளில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள விரும்பும் பிள்ளைகள் இவைகளை செய்து முடித்துவிட்டால், அதாவது தாங்கள் குறைவாக விரும்பும் விடையங்களை செய்து முடிப்பதின் மூலம் தாங்கள் அதிகம் விரும்பும் விடயங்கட்கு போய்விடலாம் என்றும் எண்ணுவார்கள். 

காட்சி உதவி பொருட்களையும் நினைவூட்டுதலையும் பாவிப்பது:

காட்சி உதவிபொருட்களினால் காட்டப்படும் கலை அட்டவணைகள், நினைவூட்டும் பொருட்கள் ASD உள்ள பிள்ளைகளின் நாளாந்த நடவடிக்கைகளையும் செயற்பாடுகளையும் செய்ய மிகவும் உதவி புரியலாம்.

உதாரணத்திற்க்கு:

  1. காட்சி உதவிபொருட்கள்:

    நடவடிக்கை அட்டவணைகள் அல்லது படிப்படியான நினைவூட்டில் பொருட்களை அவர்களின் நாளாந்த நடவடிக்கைகளான மதிய உணவை தயார்படுத்தல், பாடசாலைக்கு எடுத்து செல்லும் பைகளை ஒழுங்கு படுத்தல் போன்றவற்றில் உங்கள் குழந்தைக்கு உதவி தேவைப்படும்போது உதவ முடியும். 

  2. எழுத்து மூலமான நினைவூட்டல்களையும் படிப்படியான வழிகாட்டல்களையும் உருவாக்குதல்:

    வாசிக்கக்கூடிய பிள்ளைகட்கு சொற்களைகாட்சிப்படுத்தலாலும் அல்லது படங்கள், சித்திரங்கள் மூலம் வழிமுறைகளை விவரித்தல்.

  3. மாறுதல்கட்கு உங்கள் பிள்ளையை தயார்படுத்தல்:

    நாளாந்த செயற்பாடுகளில் மாற்றங்களை ஏற்படுத்துவது ASD உள்ள குழந்தைகட்கு சிரமமானதாய் இருக்கும், ஆதலினால் எங்கெங்கு முடியுமோ அங்கெல்லாம் மாற்றங்களை ஏற்றுக்கொள்ள உங்கள்  பிள்ளைகளை தயார் படுத்திக்கொள்ளுங்கள். (இவைகள் ஒரு ஆசிரியர் இல்லாதபோது வேறு ஒரு ஆசிரியருடன் பளக்கப்படுத்திக்கொள்வது நாளாந்தம் நடைபெற கூடிய மாற்றங்களை ஏற்றுக்கொள்வது போன்றவற்றை உள்ளடக்கும்.) 

  4. உங்கள் குழந்தையை சமூக நடவடிக்கைகளில் ஈடுபடுத்துவது:

    சமூக நடிவடிக்கைகளில் இணைந்து கொள்வது மற்றப் பிள்ளைகளிடமிருந்தும், பெரியவர்களிடந்தும் சமூக நடவடிக்கைகளை கற்றுக் கொள்ள உங்கள் பிள்ளைக்கு உதவும்.

    ASD குழந்தைகட்கு என்றே உருவாக்கப்பட்ட பலவகையான சமூகத்திறன் குழுக்கள் உள்ளன. உதாரணத்திற்க்கு - சாரணர்கள் வழிகாட்டிகள் போன்றவற்றை கூறலாம்.

    இவைகள் பலதரப்பட்ட வடிவமைப்புக்களை கொண்டும், பிரத்தியேகமாக ASD உள்ள குழந்தைகளின் சமூக தொடர்திறன்களை மேம் படுத்தவும் ஊக்கிக்கவும் உருவாக்கப்பட்டவைகளும் உள்ளன. இத்திடங்களின் விபரங்களை உங்கள் பகுதி நிர்வாக சபை (Local Councils) களில் பெற்றுக் கொள்ளமுடியலாம்.